000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யோக தட்சிணாமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a யோகபட்டத்துடன் அமர்ந்திருக்கும் தென்முகக்கடவுள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க்கணைகளை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. பின் மன்மதனின் துணைவியாகிய இரதியின் வேண்டுகோளுக்கிரங்கி மதனை உயிர்ப்பிக்கிறார். ஆனால் இரதி கண்களுக்கு மட்டும் அவன் தென்படுவான் என்றும், பிறர் கண்களுக்கு புலனாகான் என்றும் கூறுகிறார். இக்காட்சியே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. யோக நிலையில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்துள்ள காமாரி ஜடாபாரத்துடன் விளங்குகிறார். பின் கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். இடையிலிருந்து வரும் யோகபட்டம் இடது முழங்காலோடு கட்டப்பட்டுள்ளது. மார்பில் முப்புரிநூலும், கழுத்தில் சரப்பளியும், வயிற்றில் உதரபந்தமும், கைகளில் தோள்வளை, கடகவளை, முன் வளைகள், கால்களில் அரியகம் (சிலம்பு போன்ற அணி) ஆகியன அணிந்துள்ளார். காமதகன மூர்த்தி நெற்றியில் மூன்றாவது கண்ணைக் கொண்டுள்ளார். நெற்றிக் கண்ணைத் திறந்தே மதனை எரிக்கிறார். காமாந்தகமூர்த்தியின் இடதுபுறம் மாரன் எரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். இடது புறம் இரதிதேவி இரு கைகூப்பி இறைவனை வணங்கி தன் இணையை மீட்டுத் தருமாறு இறைஞ்சுகிறாள். |
653 | : | _ _ |a காமாரி, காமதகனமூர்த்தி, காமாந்தகமூர்த்தி, திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 | : | _ _ |a 8.73252599 |
915 | : | _ _ |a 77.44489074 |
995 | : | _ _ |a TVA_SCL_000258 |
barcode | : | TVA_SCL_000258 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |